கும்பகோணம், ஏப்.16: மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு மாரத்தான் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டி ஆதிகும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக 11.5 கி.மீ துாரம் சென்று தனியார் பள்ளியை சென்றடைந்தது.
இதில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.