×

சித்திரை முதல் நாளையொட்டி அக்னீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

திருக்காட்டுப்பள்ளி, ஏப். 16: திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத முதல் நாளையொட்டி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத முதல் நாளையொட்டி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். அதன்படி நேற்று அதிகாலை வசந்த மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு (விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டிகேஸ்வரர்) சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் வலம் வந்து கோபுர தரிசனம் தந்து பிரதான வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது.அக்னி தீர்த்தத்திலும், காவிரி ஆற்றிலும் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : departure ,Panchamurti ,Agniswarar temple ,Chithira ,
× RELATED மாண்டஸ் புயலால் 2வது நாளாக விமான சேவை...