பெரம்பலூர், ஏப். 16: பெரம்பலூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கான நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தும் நாள் கடைபிடிக்கப்பட்டது.
பெரம்பலூர் துறைமங்கலம் யூனியன் அலுவலகம் அருகே உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் தமிழக அளவில் தீயணைப்பு துறையில் பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கான நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தும் நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு துறையின் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் தாமோதரன், தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூணிற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பெரம்பலூர் நிலைய அலுவலர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படைவீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.