×

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

செங்கோட்டை, ஏப்.16: செங்கோட்டை காலசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜ்(38). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது பாட்டி வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கினார். காற்றுக்காக மின்விசிறியை கட்டிலில் வைத்திருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.   காலையில் வெங்கட்ராஜ் கட்டில் அருகே இறந்து கிடப்பதை பார்த்து அவரது உறவினர் செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை