பண்ருட்டி, ஏப். 16: பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி, நோட்டீஸ்கள் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வழங்கி வருகின்றன. துப்புரவு பணியாளர்கள் மகளிர் சுயஉதவிகுழுவினர் ஆகியோர் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் அரசு அலுவலகங்களான வேளாண்மை துறை, காவல்நிலையம், பள்ளிகள், அங்கன்வாடி மையம், விஏஓ அலுவலகம் ஆகிய இடங்களில் செயல் அலுவலர் அருண்குமார் தலைமையில், அவசியம் வாக்களிக்க வேண்டும் என்றும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த பணிகளை அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.