×

கருங்கல் கருணை மாதா மலை திருச்சிலுவைத் திருப்பயணம்

கருங்கல்,ஏப்.16 : கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சொந்தமான கருங்கல் புனித கருணை மாதா மலைக்கு புனித வெள்ளியன்று திருச்சிலுவைத் திருப்பயணமாக சென்று வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு 39வது திருச்சிலுவைத்திருப்பயணமானது புனித வெள்ளியன்று (19ம்தேதி) காலை 7.30 மணிக்கு துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி நடைபெற உள்ளது. துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய விவிலியப் பணிக்குழுவினர் இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளையும் தத்ரூபமாக சிலுவை சுமந்து நடித்து செல்வர். ஆலய பாடகர் குழு தலை வர் ஜோ தலைமையில் பாடல்கள் பாடி செல்வர். உண்மையிலேயே இயேசுவின் கல்வாரிப்பயணத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் இத்திருப்பயணத்தில் குமரி மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  கலந்து கொள்வர்.
  மலை அடிவாரத்திலிருந்து பேருந்து நிலையம் வரை திருப்பயணிகளை கொண்டு விட இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்திருச்சிலுவைப் பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆலய அருட்பணியாளர் பீட்டர், இ ணை அருள் பணியாளர் வீவின் ரிச்சர்டு, திருத்தொண்டர் அலெக்ஸ் ஆகியோருடன் அருள் பணிப்பேரவை நிர்வாகிகள் வில்லியம், ரெக்ஸ்லின் விஜி, ஜெகன் ததேயுஸ் மற்றும் ெசல்வின் ஜெஸ்றின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Karungal krishna ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி