×

தேர்தல் விதிமீறி பிரசாரம் இந்து மகா சபா மாநில தலைவர் மீது வழக்கு

ஈத்தாமொழி, ஏப். 16: ஈத்தாமொழி அருகே தோப்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவராக உள்ளார். இவர் மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வாட்ஸ் அப், பேஸ் புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து நாகர்கோவில் சட்டமன்ற பறக்கும் படை அலுவலர் ராஜசேகர், ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலசுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : election ,Hindu Maha Sabha ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்