×

புதூர் ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக பிரசாரம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்

விளாத்திகுளம், ஏப். 16: புதூர் ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக பிரசாரம் மேற்கொண்ட விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார், மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து முன்னாள் எம்.பி ஜெயதுரை, கட்சி நிர்வாகிககள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குசேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுண்டன்பட்டி, சென்னமரெட்டிபட்டி,  ரெகுராமபுரம், கீழக்கரந்தை, மேலக்கரந்தை, கீழக்கல்லூரணி, மேல  கல்லூரணி, சங்கரலிங்கபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு  சேகரித்தனர். நாகலாபுரம் பகுதியில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் பேசுகையில், ‘‘ மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன். விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களின் குறைகளுக்கு தீர்வுகாண்பேன். கிராமப்புறங்களில் சாலை, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன்’’ என வாக்குறுதி அளித்தார்.  பிரசாரத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், இளைஞர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் மதியழகன், விவசாய அணி முன்னாள் மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில் ஆறுமுகம், மதிமுக ஒன்றியச் செயலாளர் எரிமலை வரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

Tags : village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...