×

திருத்தணி அருகே தூக்கில் வாலிபர் சடலம்: கடன் தொல்லையால் தற்கொலை?

திருத்தணி, ஏப். 16:  திருத்தணியை அடுத்த படவேடு கிராமத்தில், மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் ஊர் பெயர் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் சடலமாக ெதாங்கினார். பச்சை கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்து இருந்தார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம்  தெரியவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்கு பதிந்து,  அவரை யாராவது கடத்தி  கொலை செய்து, சடலத்தை தூக்கில் தொங்க விட்டனரா  அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Tags : Tiruttani ,
× RELATED திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில்...