×

மயிலாப்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு வளர்ச்சி திட்டங்கள் தொடர வாக்களியுங்கள்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு

சென்னை: தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று மயிலாப்பூர் தொகுதி 122 மற்றும் 123 வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ,   ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ, நூர்ஜெகான், பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன், கணேஷ் பாபு, விஜயபாஸ்கர், வட்டச் செயலாளர்கள் சத்யா, பார்த்தசாரதி வீரன், பா.ம.க மாவட்டச் செயலாளர் சிவகுமார், தே.மு.தி.கவைச் சேர்ந்த ஆனந்தன்,  பா.ஜ.கவைச் சேர்ந்த டால்பின் தர், த.மா.காவைச் சேர்ந்த கொட்டிவாக்கம் முருகன், புதிய நீதி கட்சியைச் சேர்ந்த ஈ.துரைராஜ், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ஆதிவேந்தன், உள்ளிட்ட அதிமுக மற்றும்  கூட்டணி கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பிரசாரத்தின் போது ஜெயவர்தன் பேசியதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்த ₹1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது  டெண்டர் கோரப்பட்டுள்ளது. இளைஞர் நலனை கருத்தில்  கொண்டு வருடம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தொடங்க ₹15 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  கிடைத்துள்ளது. இது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் ₹50 லட்சம் மதிப்பில் சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில்  வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.



Tags : Jayawardene ,Mylapore ,AIADMK ,
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...