×

திருக்கோவிலூர் அருகே சோதனை அரசு பேருந்தில் ₹27.52 லட்சம் பறிமுதல்

திருக்கோவிலூர், ஏப். 14:  திருக்கோவிலூர் அடுத்த தபோவனம் பகுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பெங்களூருவில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு பார்சல் இருந்தது.அதனை பறக்கும் படையை சேர்ந்த வேளாண்மை அலுவலர் நடராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை, தலைமை காவலர் சங்கீதா, காவலர் ஏழுமலை ஆகியோர் பிரித்து பார்த்தனர். அதில் ரூ.27 லட்சத்து 52 ஆயிரத்து 610 ரொக்கம் இருந்தது. இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தியதில், அந்த பணம் பெங்களூரு கவுண்ட்பள்ளி பகுதியை சேர்ந்த அம்ஜித்(30) என்பவருக்கு சொந்தமானது என்றும், எவ்வித ஆவணமும் இன்றி அந்த ரொக்கத்தை பண்ருட்டிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்த ரொக்க பணத்தை மக்களவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருயிடம் ஒப்படைத்தனர். பின்னர் சார் ஆட்சியர் சாரு உத்தரவின் பேரில் தாசில்தார் சிவசங்கரன், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் ஆகியோர் மூலம் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Tirukovilur ,
× RELATED முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு...