×

மெடிக்கல் ஷாப் சூறை: அதிமுக பிரமுகருக்கு வலை

பெரம்பூர், ஏப். 14: கொடுங்கையூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (35). இவர், அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் (30), என்பவர் இந்த கடைக்கு வந்து மருந்து, மாத்திரை கேட்டுள்ளார்.
அதற்கு ஜெயக்குமார், ‘டாக்டர் பரிந்துரை சீட்டு இருந்தால்தான் மாத்திரை தருவேன்’ என கூறியுள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த செந்தில்குமார், 2 பேருடன் சேர்ந்து கடையை அடித்து உடைத்துவிட்டு தப்பினார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : AIADMK ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...