×

இளம்பெண் மர்மச்சாவு

செம்பட்டி, ஏப். 14: நிலக்கோட்டை செக்கடி தெருவை சேர்ந்தவர் வேலுச்சசாமி. மனைவி நாகஜோதி (28). ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் நாகஜோதி கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தில் காயங்களுடன் கிடந்ததால் கொலையா அல்லது தூக்குப்போட்டு கொண்டாரா என்ற கோணத்தில் நாகஜோதி கணவர், உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்