×

ராஜாக்கமங்கலம் அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ராஜாக்கமங்கலம், ஏப். 12:   ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் சுந்தர்லிங்கம். இவரது  வீட்டில் உள்ள குடிநீர் இணைப்பை மாநகராட்சி துண்டிப்பு செய்தது. இதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி என்பவர்தான் காரணம் என சுந்தர்லிங்கம்  நினைத்தார். இது தொடர்பாக இருவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு ரவி வீட்டிற்கு சென்றுகொண்டு  இருந்தார். அப்போது சுந்தர்லிங்கம், அவரது மகன் சுஜித் மற்றும் 2 பேர்  சேர்ந்து ரவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம்  அடைந்த ரவி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் எஸ்ஐ ராஜகோபால்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Rajagamangalam ,
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே 84 ஆமை குஞ்சுகள்...