×

செம்பனார்கோவிலில் அதிமுகவிலிருந்து விலகிய 300 குடும்பத்தினர் திமுகவில் ஐக்கியம்

செம்பனார்கோவில், ஏப்.12: செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளான குமாரமங்களம், சின்னங்குடி பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் 300 குடும்பத்திற்கு மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் நிவேதாமுருகன் தலைமையில் திமுகவில் ஐக்கியமாயினர். இது குறித்து மீனவ மக்கள் கூறுகையில், அதிமுக அரசு மீனவ மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

பாஜ தேர்தல் அறிக்கை கூட மீனவர் நலனுக்காக எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் தாங்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற செய்வோம் என தெரிவித்தனர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags : DMK ,Sembanarkovil ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...