×

அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

அருப்புக்கோட்டை, ஏப்.12: அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 9ம் தேதி 8ம் நாள் திருவிழாவாக பொங்கல் விழாவும், 10ம் தேதி 9ம் நாள் திருவிழாவாக அக்கினி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை பிராத்தனை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பல பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில் உற்சவ கமிட்டியினர் சிறப்பாக  செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் செய்திருந்தார்.

Tags : Muthumariyamman ,festivals ,Aruppukkottai temple ,
× RELATED அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் பவனி