×

முன்னாள் ராணுவ வீரர்கள் 16ம் தேதி ஆஜராக உத்தரவு

விழுப்புரம், ஏப். 12: தேர்தல் பணிக்கு, முன்னாள் படை வீரர்கள் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அனைவரும் சிறப்பு காவலராக பணிபுரிந்திட, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகில் உள்ள காவலர் பயிற்சி திடலில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும். அப்போது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சீருடை, தாங்கள் தங்கியிருந்து பணிபுரிய வேண்டியுள்ளதால் அதற்கு தேவையான பொருட்களுடன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : soldiers ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து