×

வீடும் தீப்பிடித்ததால் பரபரப்பு பெரியகுளம் நகரில் அதிமுக வேட்பாளர்களின் மனைவிகள் வாக்குசேகரிப்பு

பெரியகுளம்,ஏப்.12  பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதி இஸ்லாமிய பெண்களிடம் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரின் மனைவி ஆனந்தி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மயில்வேலின் மனைவி காமாட்சியம்மாள் வாக்கு சேகரித்தனர். தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ரவீந்திரநாத்குமாரும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மயில்வேலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தொகுதியில் ஈடுபட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளம் தென்கரை மற்றும் வடகரையில் இஸ்லாமியர்கள் குடியிருக்கும் வார்டுகளில் மக்களவை வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரின் மனைவி ஆனந்தி , சட்டமன்ற வேட்பாளர் மயில்வேலின் மனைவி காமாட்சியம்மாள் ஆகியோர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாங்கி வாக்கு சேகரித்தனர். அப்போது நகர துணைச்செயலாளர் அப்துல் சமது உட்பட இஸ்லாமிய பெண்கள்,  கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : candidate ,wives ,AIADM ,city ,Periyakulam ,
× RELATED குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட்...