திண்டுக்கல், ஏப். 12: திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் தரக்கட்டுபாட்டு நிர்ணய மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இணைந்து ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் நிதியுதவி பெறுவது தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சரவணன் தலைமை வகிக்க, வளாக இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் மனோகரன் கலந்து கொண்டு, சமுதாய பிரச்னைகள் சார்ந்த ஆய்வு கட்டுரைகளின் அவசியம், அதற்குரிய தீர்வுகளை கண்டு நிதியுதவி பெறும் வழிமுறைகள், நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கால அட்டவணை பற்றியும் விளக்கி உரையாற்றினார். ஏற்பாடுகளை மைய ஒருங்கிணைபயாளர்கள் சண்முகவேல், மோகன்பாபு செய்திருந்தனர்.