திசையன்விளை, ஏப். 12: திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா, சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் பிரேம் அரசன் ஜெயராஜ் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகர் வரவேற்றார். தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் புறாக்களை பறக்கவிட்டு விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சமாரியா சேகர முதன்மை குரு சாமுவேல், நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜாசிங் ரோக்லண்ட், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், தொழிலதிபர்கள் விகேஷ்குமார், அரிகரசுதன், ஆல்வின், நவநீதகிருஷ்ணன், குமார் பேசினர். மாணவர் பாலசுப்பிரமணியன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அழகேஷ்குமார், பேராசிரியர் பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினர். முடிவில் பேராசிரியர் ஒயிட்டன் சகாயராஜ் நன்றி கூறினார்.