×

குளத்தூர் சுற்று வட்டார பகுதியில் கனிமொழி, வசந்தம்ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு

குளத்தூர், ஏப்.12: குளத்தூர் சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் தீவிரபிரசாரம் மேற்கொண்டனர். சென்ற இடங்களில் அவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம்ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மாலை விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய பகுதிகளான குளத்தூரை அடுத்த பனையூர் கிராமத்திலிருந்து தேர்தல் பிரசாரத்தை துவக்கினர். தொடர்ந்து அவர்கள் குளத்தூர், குளத்தூர் காலனி, வைப்பார், கலைஞானபுரம், இ.வேலாயுதபுரம், மேல்மாந்தை, பல்லாகுளம், நெடுங்குளம், வேடப்பட்டி, விருசம்பட்டி, இலந்தைகுளம், லெக்கம்பட்டி, லட்சுமிநாராயணபுரம், கீழவிளாத்திகுளம், அரியநாயகிபுரம், தத்தநேரி, குமாரசக்னாபுரம், சூரங்குடி, தங்கம்மாள்புரம், வடக்குசெவல், பச்சையாபுரம், வேம்பார் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள், கனிமொழி, வசந்தம் ஜெயக்குமாருக்கு மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
தொடர்ந்து கனிமொழி பேசியது, இப்பகுதி கிராமங்களில் கிராம சாலைகள் இல்லை, தண்ணீர் வசதி இல்லை, குளங்கள் தூர்வாரப்படவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாத இந்த அவல நிலை ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். மேலும் விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் இப்பகுதி கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சீரமைக்கபடும். மேலும் பனை தொழிலாளர்களுக்கு வீட்டுவசதிகள் அமைத்து தரப்படும், மீனவர்களுக்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்படும் என கூறினார்.
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi ,VasanthamJayakumar ,area ,Kuttur ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...