×

பாஜ வேட்பாளர், முன்னாள் கவுன்சிலர் மிரட்டுவதாக போலீசில் புகார்

தூத்துக்குடி, ஏப். 12: தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்த பகுதிகளில் சில இடங்களுக்குள் அவர் செல்ல அப்பகுதி பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் பனிமயநகர் பகுதிகளில் தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் அதிமுக பிரமுகருமான கோல்டன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த சிலர் முன்னாள் கவுன்சிலர் கோல்டனிடம், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாதவர்களை இங்கு அழைத்து வந்தது தவறு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோஷம் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து வேட்பாளர் தமிழிசை வேகமாக சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று பனிமயநகர் பொதுமக்கள் சார்பாக 5க்கும் மேற்பட்ட பெண்கள் சுமிதா என்பவர் தலைமையில் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதில், பாஜ வேட்பாளர் தமிழிசை மற்றும் முன்னாள் கவுன்சிலர் கோல்டன் ஆகியோர் எங்களுக்கு எதிராக பொய்வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,candidate ,councilor ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...