×

திருமலைக்கேணியில் பங்குனி சஷ்டி

நத்தம், ஏப். 12: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி மாத சஷ்டி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அங்குள்ள முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அருகிலுள்ள காமாட்சி மவுன குரு மடத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED பழநியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த...