×

முதல்வர் பிரசாரத்தில் பங்கேற்ற தேமுதிக தொண்டர் மாரடைப்பால் சாவு

அரியலூர், ஏப். 11: அரியலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் மாரடைப்பால் தேமுதிக தொண்டர் இறந்தார்.அரியலூர் அண்ணா சிலை அருகே சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அதில் தேமுதிகவை சேர்ந்த செம்பியக்குடி கிளை செயலாளர் எலியாஸ் (46) பங்கேற்றார்.அப்போது அவர் திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags : Death ,volunteer ,campaign ,CM ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...