×

ஆதிப்பட்டினம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடல்பசு

மணமேல்குடி,ஏப்.11: புதுக்கோட்டை மாவட்டம் ஆதிப்பட்டினம் கடற்கரையில் கடல்பசு இறந்து கரை ஒதுங்கியது  மணமேல்குடியை அடுத்த ஆதிப்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் கடற்பசு ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்ஐ ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பிறந்த இறந்த கடற்பசுவை பிரேதபரிசோதனை செய்து கடற்கரை ஓரத்தில் புதைக்கப்பட்டது இறந்த கடற்பசு 6 அடி நீளம். 500 கிலோ எடையும் கொண்டது.


Tags : seaside ,shore ,beach ,Adityatinam ,
× RELATED அரியமான் கடற்கரையில் கோடைகால விழா: கலெக்டர் ஆய்வு