×

. கடவூர் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தீவிர வாக்கு சேகரிப்பு

கரூர்,ஏப்.11: கடவூர் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தீவிரமாக வாக்கு சேகரி–்த்தார்.கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை நேற்று கடவூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.  அப்போது தம்பிதுரை பேசுகையில், நான் கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 40 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உள்ளேன், இப்போதும் சென்று கொண்டிருக்கிறேன்.

அனைத்து கிராமங்களுக்கும் சென்ற எம்பி நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும். ஏற்கனவே மக்கள் குறைகளை கேட்டறிந்து துறை ரீதியாக அதிகாரிகள் மூலம் அடிப்படைவசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. குடிநீர், வடிகால், மின்விளக்கு, சாலை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் எம்பியின் வேலை. சிலர் என்ன திட்டங்களை கொண்டுவந்து விட்டார் என கேட்டு குழப்புவதை மக்கள் நம்பவேண்டாம். சின்னத்திற்குத்தான் வாக்கே தவிர தனிப்பட்டஎனக்கு அல்ல. ஜெயலலிதா வழியில்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என்றார்.

Tags : AIADMK ,candidate ,Thambidurai ,
× RELATED ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள்...