×

துறையூரில் முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் நடுரோட்டில் கிடந்த ரூ.9,600 கட்சியினருக்கு பட்டுவாடா செய்யப்பட்டதா?

துறையூர், ஏப்.11: துறையூரில் முதல்வர் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.9,600ஐ தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றினர். இந்த பணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை தாசில்தார் ஞானவேல் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் துறையூர் குட்டக்கரை என்ற இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்து சந்தேகப் படும்படியாக சிலர் ஓடினார்கள்.

அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் அனாதையாக ரூ.9,600 கிடந்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த பணம் யாருடையது, எதற்காக இங்கு கொண்டு வந்தார்கள், பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு கொண்டுவரப்பட்ட பணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chief Minister ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...