×

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம் ஏப்.18ல் தேரோட்டம்

திருவாடானை, ஏப். 11: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானை அருகே திருவெற்றியூரில சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடந்தது. விழாவினையொட்டி கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் வரும் 14ம் தேதி திருக்கல்யாணமும், 18ம் தேதி தேரோட்டமும், 19ம் தேதி தீர்த்தவாரியுடன் பத்து நாள் திருவிழா நிறைவடைகிறது. விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் பாகம்பிரியாள் அம்மனும் வன்மீக நாதர் சுவாமியும் சிம்ம வாகனம், நந்தி வாகனம், குதிரை, காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனத்திலும் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு கலை நிகழ்ச்சிகளும் வாணவேடிக்கைகளும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகமும் விழா கமிட்டியினரும் செய்து வருகின்றனர்.

Tags : Chiranjeevi ,festival ,
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!