×

போக்குவரத்து நெரிசலை குறைக்க உடுமலை பேருந்து நிலையம் அருகே சுரங்கபாதை அமைத்து தர வலியுறுத்தல்

உடுமலை,ஏப்.11: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக்கிளை மாநாடு உடுமலையில் நடந்தது. சங்க தலைவர் சேசாச்சலம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜன் வரவேற்றார்.
செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர் ஆர்.செல்வராஜ், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொள்ளாச்சி- பழனி சாலையில் ராகல்பாவி பிரிவில் இருந்து சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை வழியாக புறவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை துறை அமைக்க வேண்டும். எலையமுத்தூர் பிரிவில் இருந்து கொழுமம் பாதை இணைப்பு சாலை ஏற்படுத்த நிலம் இலவசமாக வழங்கியும் சாலை அமைக்கும் பணி தொய்வாக உள்ளது. இதை விரைந்து முடிக்க வேண்டும்.உடுமலை பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அல்லது சுரங்கபாதை அமைத்து பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உடுமலை கச்சேரி வீதி, தளி  ரோடு, வஉசி வீதி, சத்திரம் வீதி, பழனி- பொள்ளாச்சி பாதை, திருப்பூர் சாலைகளின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : subway ,Udumalai ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்