×

வால்பாறையில் பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு மைக்ரோ பார்வையாளர் நியமனம்

வால்பாறை, ஏப்.11:வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட 68 வாக்குச்சாவடிகளும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ளதால் வன விலங்குகள் அடிக்கடி வரும் நிலை உள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முள்ளம்பன்றி, சிறுத்தை, கட்டெருமை மற்றும் யானைகள் வருவதும் வாடிக்கையாக உள்ள நிலையால், வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமவெளி பகுதியில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாற்ற முன்வரவில்லை. எனவே தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று வால்பாறை பகுதியில் உள்ளவர்கள் வால்பாறை பகுதி வாக்குச்சாவடியில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடவும் உத்திரவிடப்பட்டு, அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பதட்டமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட மானாம்பள்ளி மற்றும் சக்தி எஸ்டேட் வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவின்போது கூடுதலாக  மைக்ரோ அப்சர்வர் எனும் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குசாவடிகளில் வெப்கேமரா பதிவிற்கும் உத்திரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி துரைசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Micro-viewer ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்