×

உத்தனபள்ளி அருகே பிளஸ் 1 மாணவி கடத்தல்

தேன்கனிக்கோட்டை, ஏப்.11: தேன்கனிக்கோட்டை தாலுகா, உத்தனப்பள்ளி அருகே ஒபேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (42) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது 16 வயது மகள், உத்தனப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பிளஸ்1 தேர்வு முடிந்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி, வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அக்கம்பக்கத்தினரிடையே விசாரித்த போது, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சூடப்பா மகன் உமேஷ்(23) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : student kidnapping ,Udanpalli ,
× RELATED மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்