×

விவசாயிகளை வஞ்சித்த மோடி அரசை தூக்கி எறிய காங்கிரசுக்கு வாக்களியுங்கள்


கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் சார்பில் டாக்டர் செல்லகுமார் போட்டியிடுகிறார். நேற்று, வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தாரப்பள்ளி கூட்டுரோடு, குந்தாரப்பள்ளி, பண்டப்பகொத்தூர், பல்லேரிப்பள்ளி, எகுடதம்பள்ளி, வி.மாதேப்பள்ளி, ஜிஞ்சலூர், தடத்தாரை, வேப்பனஹள்ளி, நாச்சிக்குப்பம் கூட் ரோடு, பெரியமணவாரனப்பள்ளி, நேரலகிரி, தீர்த்தம், பாலனப்பள்ளி, கே.என்.போடூர், குரியனப்பள்ளி, நல்லூர், ஐப்பிகானப்பள்ளி, சின்னகொத்தூர், சிந்தகும்மனப்பள்ளி, வராகசந்திரம், நெடுசாலை, சென்னசந்திரம், குப்பச்சிப்பாறை, பீமாண்டப்பள்ளி, புளியஞ்சேரி ஆகிய இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

 பிரசாரத்தின் போது, டாக்டர் செல்லகுமார் பேசுகையில், ‘விவசாயிகளை வஞ்சித்த மோடி அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், அவர்களை மோடி கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அவர் கண்டுகொள்ளவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் செய்த அவருக்கு உரிய பாடத்தை புகட்ட கை சின்னத்தில் வாக்களியுங்கள்,’ என்றார். பிரசாரத்தின் போது திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மேற்கு மாவட்ட பொருளாளர் ஜெயராமன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் ரகுநாத், பொருளாளர் கலீல்பாஷா, இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், நிர்வாகிகள் அன்பரசு, சதாசிவம், முருகேசன், சிவக்குமார், கிருஷ்ணன், மனோகரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காசிலிங்கம், கல்யாணி, பைரேசன், முனிராஜ், நாகராஜ், செல்வராஜ், தசரதன், அக்பர்அலி, விடுதலைச் சிறுத்தைகள் கனியமுதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : government ,Congress ,Modi ,peasants ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...