×

கடத்தூர் பகுதியில் வைக்கோல் விற்பனை ஜோர்

கடத்தூர், ஏப்.11: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கடத்தூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் வைக்கோலை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வைக்கோல் வியாபாரிகள் கூறுகையில், ‘விழுப்புரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் வைக்கோலை எடுத்து வருகிறோம். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதிகளில் ஒரு கட்டு ₹160 முதல் ₹250 வரை விற்பனை செய்கிறோம்,’ என்றனர்.

Tags : hay sale ,area ,Kadathur ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...