×

அம்பையில் சமரச மைய விழா

அம்பை, ஏப். 11:  அம்பை சார்பு நீதின்றத்தில் சார்பு நீதிபதி கவிதா தலைமையில் இயங்கி வரும் சட்டப்பணிகள் குழுவுடன் இணைந்த சமர மையத்தின் 14ம் ஆண்டு துவக்க விழா விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்குமார், கூடுதல் உரிமையியல் நீதிபதி செந்தில் குமார்  தலைமை வகித்தனர். சமரச மைய வக்கீல்கள் வள்ளுவராஜ், சாகூல் ஹமீது, ராஜேந்திரன், செல்வ ஆண்டனி உள்ளிட்ட பலர் பேசினர். இதுகுறித்த துண்டுபிரசுரங்களை வக்கீல் ஜோயல் ஹென்றி வழங்கினார். விழாவில் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமை எழுத்தர் முத்துவேல் நன்றி கூறினார்.

Tags : Concentration center ceremony ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி