×

வாசுதேவநல்லூர் அருகே பைக் மீது லாரி மோதி இளம்பெண் பரிதாப பலி

சிவகிரி, ஏப். 11:  வாசுதேவநல்லூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். சிவகிரி ஜீவாநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(34). பந்தல் தொழிலாளி. இவரது மனைவி பிச்சம்மாள்(25). தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க மாரியப்பன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பைக்கில் புளியங்குடி சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிவகிரிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தனர்.  வாசுதேவநல்லூர் எம்எல்ஏ அலுவலகம் அருகே வந்தபோது கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த மீன் லாரி, பைக் மீது மோதியது. இதில் பிச்சம்மாள் படுகாயமடைந்தார். மாரியப்பன் லேசான காயமும், குழந்தைகள் காயமின்றியும் தப்பினர். தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த பிச்சம்மாளையும், மாரியப்பனையும் மீட்டு  புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிச்சம்மாள் இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கலா, லாரி டிரைவர்  கொல்லம் காக்கோவில் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் மாரிமுத்துவை (38) கைது செய்தார்.

Tags : Vasudevanallur ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு