×

நாகை அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் ஹேன்ட்பேக் பறித்தவர் கைது

நாகை, ஏப்.11:நாகை அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் ஹேன்ட்பேக் பறித்தவர் கைது செய்யப்பட்டார். நாகை அடுத்த  பொரவச்சேரி கிழ தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி தேவி (35). இவர்   நாகூரை அடுத்த  சன்னமங்களததை சேர்ந்த சிங்காரவேல் என்பவர் வீட்டு காதணி விழாவிற்கு  சென்றார். பின்னர்  சங்கமங்களம் பேருந்து நிறுத்தத்தில்  ஊர் திரும்ப பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது  பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்  தேவி வைத்திருந்த ஹேன்பேக்கை பறித்து கொண்டு தப்பி ஓடினர். அப்போது தேவி கூச்சல் போட்டதால் அருகில் இருந்தவர்கள் அந்த இரண்டு மர்ம நபர்களின் ஒருவரான  நாகை காடம்பாடி புதிய நம்பியார்  நகரை சேர்ந்த பாலு மகன் கலியபெருமாள் (21) பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து ஹேன்பேக்கை மீட்டனர்.  மற்றொரு நபர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல்  கொடுத்துள்ளனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த  கலியபெருமாளை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து தப்பி ஓடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Tags : handpacker ,Nagai ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு