×

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வரலட்சுமி மதுசூதனன் பிரசாரம்

கூடுவாஞ்சேரி, ஏப். 11: காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வதை ஆதரித்து, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரம் செய்தனர்.வெங்கடமங்கலம் ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன் தலைமையிலும், நல்லம்பாக்கம் ஊராட்சியில் திமுக ஊராட்சி செயலாளர் சங்கர் தலைமையிலும், நெடுங்குன்றம் ஊராட்சியில் முன்னாள் தலைவர் சோ.ஆறுமுகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.ஆறுமுகம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன் தலைமையிலும், வண்டலூர் ஊராட்சியில் முன்னாள் தலைவர்கள் ஆராமுதன், குணசேகரன் ஆகியோர் தலைமையில் திறந்த ஜீப்பில் திமுக வேட்பாளர் ஜி.செல்வத்துக்கு, ஆதரவு தெரிவித்து, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தீவிர வாக்கு சேகரித்தார்.

மண்ணிவாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா பொன்னுசாமி தலைமையிலும், ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் வாக்கு சேகரித்தார். காரணைபுதுச்சேரி ஊராட்சியில் முன்னாள் தலைவர் பத்மநாபன் தலைமையிலும், கீரப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும் பிரசாரம் செய்தனர்.குமிழி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மேகநாதன் தலைமையிலும், கல்வாய் ஊராட்சியில் முன்னாள் தலைவர் தயாளன் தலைமையிலும், பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் முன்னாள் தலைவர் கே.எஸ்.ரவி தலைமையில் வாக்கு சேகரித்தார்.காயரம்பேடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் ராமன் தலைமையிலும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தலைமையிலும் வாக்கு சேகரித்தனர்.



Tags : Varalakshmi Madushudanan ,DMK ,candidate ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...