×

முத்துப்பேட்டையில் மாடியிலிருந்து தவறிவிழுந்து தச்சு தொழிலாளி பரிதாப பலி

முத்துப்பேட்டை, ஏப்.10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கண்ணாரப்பத்தர் தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் முருகேஷ்(46). தச்சு தொழிலாளி. இவர் அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் வாடகை காலனி வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று வேலை முடிந்து மாடி படியில் ஏறி தனது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த முருகேசுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மாடி தடுப்பு சுவரை தாண்டி சாலையில் விழுந்தார். இதில் முருகேஷ் பலத்த காயம் அடைந்து கீழே கிடந்தார்.  இதனைக்கண்ட அப்பகுதியினர் முருகேசை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர்; ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

Tags : carpenter ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி