குளித்தலை, ஏப். 10: பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி குளித்தலை ஒன்றிய பகுதியில் வாக்குகள் சேகரித்தார். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நேற்று சூரியனூர், நச்சலூர், நங்கவரம், மேல்நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூர், நல்லூர், இரணியமங்கலம், பணிக்கம்பட்டி, திம்மம்பட்டி, சத்தியமங்கலம், வை.புதூர், ராஜேந்திரம், தண்ணீர்பள்ளி மருதூர், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவபதி பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார். நச்சலூர் வந்த அவர் அங்கு உள்ள டீக்கடையில் பொதுமக்களோடு சேர்ந்து டீ குடித்தபடி வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரவும். மத்தியில் மோடி அரசு தொடரவும் வாக்களிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் வழங்கப்பட்ட நல திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட ஆதரிக்க வேண்டும் என்றார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் விஜயவிநாயகம், மருதூர் திருநாவுக்கரசு, பேரூர் செயலாளர் திருப்பதி, தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் அசோக்குமார், தேமுதிக ஒன்றிய செயலாளர் தாமோதரன், பிஜேபி மாவட்ட தலைவர் முருகானந்தம் மற்றும் பாமக, புதிய தமிழகம் கட்சியினரும் சென்று வாக்குகள் சேகரித்தனர்.