×

ஜூன் மாதம் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,ஏப்.10: ஜூன்மாதம் 10ம்வகுப்பு துணைத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். சமச்சீர்கல்வியில் தேர்ச்சிபெறாதோருக்கு இறுதிவாய்ப்பு.  என பெரம் பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அருளரங்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஜுன் மாதம்நடைபெறவுள்ள 10ம்வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் (ஏற்கனவே அறிவியல்பாட செய்முறை பயிற்சிபெற்றவர்கள்) அரசுத்தேர்வுகள் இயக்ககத்திற்கு விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் கல்விமாவட்டத் தனித்தேர்வர்களில், ஆண்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், பெண்கள்  பெரம்பலூர் புனித.தோமினிக் பெண்கள் மேல்நி லைப் பள்ளிக்கும், வேப்பூர் கல்விமாவட்ட தனித்தேர்வர்களில் குன்னம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளிக்கும், பெண்கள் குன்னம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளிக் கும்சென்று வரும் 12ம்தேதி மாலை5.45வரை தங்களின் விண்ணப் பத்தினை பதிவுசெய்து கொள்ளலாம். தற்பொழுது நடைமுறையிலுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் தேர்ச்சிபெறாத பாடங்களில் தேர்வெழுத ஜுன் மாதம் சிறப்புதுணைப் பொதுத்தேர்வே இறுதிவாய்ப்பாகும். இந்த வகைத்தேர்வர்கள் ஜூன் 1ம்தேதியன்று  பதினான்கரை வயதினைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.  ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் ஆசிரியர்கல்வி ஆராய் ச்சி மற்றும் பயிற்சிஇயக்ககத்தால் நடத்தப்பட்ட திறந்தவெளிப் பள்ளியில் 10ம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களில் ஜூன் 1ம்தேதியன்று பதினான்கரை வயது பூர்த்தியடைந்த வர்கள், ஓ.எஸ்.எல்.சி. பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தைத்தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின் தோல்வியுற்ற பாடங்களை மட்டும், முதன்மை மொழிப்பாடத்தில் தமிழ்மொழிதவிர பிறமொழிப் பாடங்களில் தோல்வியுற்றிருப்பினும், மெட்ரிக், ஆங்கிலோ இந்திய பழையபாடத்திட்டத்தில்  ஓரிருபாடங்கள் தோல்வியுற்றி ருப்பினும் மேற்படிதேர்வர்கள், அறிவியல்பாட செய்முறை பயிற்சிபெற்றவர்கள், 10ம் வகுப்பு சமச்சீர் பாடத்திட்டத்தில் ஓரேநேரத்தில் அனைத்துப்பாடங்களுக்கும் விண்ணப் பிக்க வேண்டும்.
மேற்படி மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரத்தினை www.dge.tn.gov.in  இணையதளம்மூலம் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Individuals ,
× RELATED அரசு புறம்போக்கு நிலத்தை...