×

திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் நங்கவள்ளி ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

மேட்டூர், ஏப். 10:  தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாகடர் செந்தில்குமார், நேற்று நங்கவள்ளி ஒன்றியத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரித்தார். முன்னதாக நேற்று காலை கோனூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை துவக்கினார். சமத்துவபுரம், கோனூர், மடத்துப்பட்டி, மேட்டுத்தானம்பட்டி, வீரனூர், புதுவேலமங்கலம், குஞ்சாண்டியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்  வாக்கு சேகரித்தார்.  கோனூர் சமத்துவபுரத்தில் அவர் வாக்காளர்களிடையே பேசும்போது: நான் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவன். உங்களுடைய பிரச்னைகளுக்கு என்னைத்தேடி நீங்கள் வரவேண்டாம். நானே உங்களைத்தேடி வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.  அன்புமணி ராமதாசை நீங்கள் நேரில் சந்திக்க முடியாது. தைலாபுரம் சென்றாலும் அங்கு கேட் அடைக்கப்பட்டிருக்கும். உங்களுடைய குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு காண்பேன். தொகுதி முழுவதும் மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தி செழிப்பாக்குவேன். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, உள்ளூர் ஆலைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்றார். இந்த பிரசாரத்தின் போது சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் கோபால், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன், அவைத்தலைவர் ராஜி, கிராம சொயலாளர் சண்முகம், பேரூர் சொயலாளர் அல்லிமுத்து, பொன்னுவேல், துணைச் செயலாளர் முருகன், கிளை செயலாளர் சுரேஷ் உட்பட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். 

Tags : Senthil Kumar ,DMK ,women ,
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....