×

துரோகத்திற்கு பெயர் போனவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் தினகரன் தாக்கு

சிவகங்கை, ஏப். 10: துரோகத்திற்கு பெயர் போனவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் என டிடிவி தினகரன் பேசினார். சிவகங்கையில் அமமுக வேட்பாளர் தேர்போகிபாண்டியை ஆதரித்து அவர் பேசியதாவது: சிவகங்கை மண் ராஜ விசுவாசத்திற்கு பெயர் போன மண். ஆனால் தமிழ்நாட்டில் துரோகத்திற்கு பெயர் போனவர்கள் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும். மோடி தான் அதிமுகவிற்கு பொதுச் செயலாளராக உள்ளார். நான்காம் கிளாஸ் படித்தவரெல்லாம் அமைசச்ராக இருக்கின்றனர். டாடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் மோடியை, டாடி என்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது யாரோடு கூட்டணி வைக்க கூடாது என கூறினாரோ அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு இது அம்மாவின் ஆட்சி என்கின்றனர். வேண்டுமானால் எடப்பாடி அம்மாவின் ஆட்சி என்றுதான் கூற வேண்டும்.

எட்டு வழிச்சாலை வேண்டும் என கொண்டு வந்தவர்களுக்கு நீதிமன்றமே அறை கொடுத்ததுபோல் சாலையை ரத்து செய்து விட்டது. இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்கும் பிஜேபி வேட்பாளர் எச்.ராஜாவை சைபர் சைக்கோ என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் அரசாங்கம் இருக்கிறதா, இது செயல்படாத அரசு என்றார் எச்.ராஜா. அதிமுகவின் கூட்டணி மெகா கூட்டணியில்லை. டெண்டர்கள்தான் அந்தப் பக்கம் உள்ளது. தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டவர் மோடி. தமிழ்நாட்டிற்கு வேண்டிய திட்டங்களை செயல்படுத்தவும், வேண்டாத திட்டங்களை ரத்து செய்யும் ஒரு பிரதமரை தேர்வு செய்வோம். இவ்வாறு பேசினார்.

Tags : treachery ,EPS Dinakaran ,OBS ,
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி