நெல்லை, ஏப். 10: நெல்லையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சைக் கேட்க ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். கூட்டத்திற்காக போடப்பட்ட பந்தல், மக்கள் திரளில் நிரம்பிய நிலையில் வெளியிலும் கொளுத்தும் வெயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நின்று அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டனர்.கூட்டத்தில் திமுக வேட்பாளர் ஞான திரவியம், முன்னாள் எம்.பி. பீட்டர்அல்போன்ஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தென்காசி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் சுப. சீதாராமன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், ஜோசப் பெல்சி,முன்னாள் துணைமேயர் முத்துராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் பாளை பூக்கடை அண்ணாத்துரை, நெல்லை டவுன் கோபி என்ற நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் விஎஸ்ஆர் ஜெகதீஷ், பாளை தங்கப்பாண்டியன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தாழை கேஆர் ராஜூ, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.க. மணி, விவசாய அணி முன்னாள் அமைப்பாளர் போர்வெல் கணேசன், துணை அமைப்பாளர் நடுவை நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் செவல் அரிகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் தவசிராஜன், செல்வ சூடாமணி, மாநகர வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், மாநில மகளிரணி இணைச் செயலாளர் ராஜம்ஜான், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.வி. சுரேஷ், குமார், ராஜகுமாரி, சைபுன்னிசா, பொறியாளர் அணி அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிகோ, மாவட்ட பொருளாளர் அருண்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எம். சரவணன், ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் வருஷபத்து ரவி, நெசவாளர் அணி அந்தோணி, முன்னாள் கவுன்சிலர் நவநீதன், கார்டன் சேகர், பேரங்காடி ஐயப்பன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மேகை செல்வம், பாளை. யூனியன் முன்னாள் கவுன்சிலர் மகாராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம் சிவகுமார், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு. ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் எம்எல்ஏ கோதர்மைதீன், மாவட்ட தலைவர் எல்கேஎஸ் மீரான்முகைதீன், மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமதுஅலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன், தமமுக பிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், புறநகர் மாவட்டம் திருக்குறுங்குடி சுந்தர், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் பாளை ரபீக், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், பார்வர்டு பிளாக் வை சுரேஷ், ஐஜேகே பாலு சங்கீத் மற்றும் திமுகவினர் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.