×

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பேராவூரணியில் மனித சங்கிலி

பேராவூரணி, ஏப். 10: பேராவூரணி ஒன்றியம் செங்கமங்கலம், அம்மையாண்டி, பைங்கால் ஊராட்சிகளில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகளிலும் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. செங்கமங்கலம், அம்மையாண்டி, பைங்கால் ஊராட்சிகளில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், கோ.செல்வம் (கி.ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...