×

மயிலாடுதுறையில் பெரியார் சிலை சேதம் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோர் மீது வழக்கு

மயிலாடுதுறை, ஏப்.10:  புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை கேணிகரையில் உள்ள பெரியார் சிலை முன் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை முன் அனுமதியின்றி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அவர்கள் மீது 2 சட்டப் பிரிவுகளின்கீழ் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தளபதி ராஜ் , தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்பு மகேஷ், திராவிடர் விடுதலைக் கழகம் மகேஷ் ,சாதி மறுப்பு இயக்கம் இளங்கோவன் சபீர் அகமது, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு விஜயராகவன், திமுக மாவட்ட துணை செயலாளர் சத்தியேந்திரன் உட்பட மற்றும் பலர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : Periyar ,Mayiladuthurai ,protesters ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...