×

மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் கரூர் ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், ஏப். 10: மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும் என்று கரூரில் நடந்த ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூர் நகராட்சி ஓய்வூதியர் சங்க கூட்டம் அதன் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பழனிச்சாமி, ராமராஜ், சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், கூட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு சேமநல நிதி வட்டித்தொகையை விரைவில் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி விரைவில் வழங்க வேண்டும். கரூர் நகராட்சி ஒய்வூதியர்கள் சங்கத்தினர் 142 குடும்பத்தினர் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : government ,downturn ,pensioners ,union meeting ,Karur ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...