கரூர், ஏப். 10: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வடக்கு கிராமத்தில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான மாஸ்டர் திருமண மண்டபம் வரும் 25ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம்கோர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கரூர் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெறப்பட்ட ரூ.25,000க்கான வங்கி வரைவோலையினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அசையா சொத்து மற்றும் ஏல நிபந்தனைகள் விவரங்களை கரூர் மாவட்ட இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.