×

தென்தாமரைகுளம் அருகே ரயில் மோதி தொழிலாளி பலி

தென்தாமரைகுளம், ஏப். 10: தென்தாமரைகுளம் அருகே இரட்டை ரயில்பாதை பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தொழிலாளி ரயில் ேமாதி பரிதாபமாக உயிரிழந்தார்.தென்தாமரைகுளம் அருகே வடக்குதாமரைகுளம் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டம் வீரகுப்பம் பகுதியை சேர்ந்த எல்லப்பன் (54) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 4.45 மணியளவில் எல்லப்பன் பாலப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் விலகி ஓடிய நிலையில், பாலத்தில் நின்ற எல்லப்பன் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு எல்லப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Train collision worker ,Thenmalaarikulam ,
× RELATED தென்தாமரைகுளம் அருகே புதர் மண்டிய காவலர் குடியிருப்பு