×

தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் கோயிலில் ஏப்.14ல் சண்முகருக்கு அன்னாபிஷேகம்

திருச்செந்தூர், ஏப். 10: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை 4மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூப  தீபாராதனையும், 5 மணிக்கு அபிஷேகமும், 8 மணிக்கு தீர்த்தவாரி  நடைபெறுகிறது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேத்தை தொடர்ந்து சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மற்ற காலபூஜையும், பகலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. சிறப்பு கலைநிகழ்ச்சியாக கோயில் கலையரங்கில் கோயில் நாதசுர மங்கள இசை, தேவார இன்னிசை, ஆன்மீக சொற்பொழிவு, கோயில் பொது விபர குறிப்பேடு வெளியிடுதல், ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, இந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.


Tags : Annapishekam ,temple ,Shanmukham ,Tiruchendur ,Tamil New Year ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...