தூத்துக்குடி, ஏப்.10: புதூர் ஒன்றியம் கீழக்கரந்தை ஊ.ஓ.ந.நி. பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில் ‘பெண் கல்வி, சுகாதாரம், இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்’ என்ற தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. இப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி தனலட்சுமி பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், 8ம் வகுப்பு மாணவி ஜெயபிரிதா கட்டுரைப்போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடமும் பெற்றனர். முதல் பரிசு ரூ.4ஆயிரத்துக்கான காசோலையும், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரத்து 500க்கான காசோலையும் வட்டாரக்கல்வி அலுவலர் சரளா, ஆசிரியப்பயிற்றுநர் சிவசங்கரி ஆகியோர் வழங்கினர். விழாவில் தலைமையாசிரியர் கவிதா, ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, சேகர், சக்திவேல், வெங்கடேஷ் கலந்து கொண்டனர். இப்பள்ளியானது தொடர்ந்து 3 வருடங்களாக மாவட்ட அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.